ஆன்லைனில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கான கேம்பஸ் இன்டர்வியூ.!

Default Image

சென்னையில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கான கேம்பஸ் இன்டர்வியூ ஆன்லைன் மூலம் தொடங்கியுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு நடைபெறும் கேம்பஸ் இன்டர்வியூ இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக தடைப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டிற்கான வளாக நேர்காணல் ஆன்லைன் மூலம் தொடங்கியுள்ளது.

அந்த வகையில் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வரும் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்வி, குரோம்பேட்டை தொழில்நுட்ப கல்லூரி மற்றும் கட்டவியல் வடிவமைப்பு கல்லில் நிலையம் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்கான கேம்பஸ் இன்டர்வியூ ஆன்லைன் மூலம் தொடங்கியுள்ளனர்.

செப்டம்பர் 30ம் தேதி வரை நடைபெறும் முதற்கட்ட நேர்காணலில் கலந்து கொள்வதற்காக 3,300 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த கேம்பஸ் இன்டர்வியூயில் 25 வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. அவை அனைத்தும் ஆண்டுக்கு 12 லட்சம் முதல் 28 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும் பணிகளை மாணவர்களுக்கு வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்