Kaveri hospitalSurgery [FileImage]
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை தொடங்கியுள்ளது.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சோதனைக்கு அழைத்துச் செல்லும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொண்டதில் இதயத்தில் அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் தனியார் மருத்துவமனைக்கு மாற்றக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டதன் பேரில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 5.15 மணியளவில் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை தொடங்கியுள்ளது. மருத்துவர் ரகுராமன் தலைமையிலான மருத்துவர் குழு அவருக்கு இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துவருகின்றனர். சிகிச்சைக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜி சில நாட்கள் ஓய்வில் இருக்கவேண்டும் எனவும் மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…