ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி பிப்ரவரி 7, வேட்பு மனுக்கள் மீது பிப்ரவரி 8-ஆம் தேதி பரிசீலினை நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் தாக்கலாகும் வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் பிப்ரவரி 10 ஆகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
பிப்., 27ல் வாக்குப்பதிவும், மார்ச் 2ல் இடைத்தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையும் நடக்க உள்ளது. தினமும் முற்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்யப்பட வேண்டும். வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பிப்ரவரி 5 ஞாயிறு என்பதால் வேட்மனு தாக்கல் செய்ய இயலாது.
திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 3-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார். மேலும், தேமுதிக சார்பாக அக்கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். அமமுக – சிவபிரசாந்த், நாம் தமிழர் கட்சி – மேனகா நவநீதன் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…