ஜீன் 22ம் தேதி பொதுக்கூட்டம்? சீமானுடன் கூட்டணி அமையுமா? புஸ்ஸி ஆனந்த் விளக்கம்.!

Published by
கெளதம்

நடிகர் விஜய் : உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது.

உலக பட்டினி தினமாகக் கருதப்படும் (மே 28ம் தேதி) இன்று நடிகரும் அரசியல் வாதியுமான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அதன்படி, சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் அருகே, தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்று, பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வை தொடக்கி வைத்தார். அங்கு அவர், மக்களுக்கு அன்னதானம் உணவு பரிமாறி அவர்களுடனே அமர்ந்து சாப்பிட்டார்.

உணவு வழங்கிய பின்பு செய்தியாளர்களிடம் பேசிய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், “தளபதி விஜய் ஆணைக்கிணங்கதமிழகம் முழுவதும் மதிய உணவு வழங்கி வருகிறோம். இது இன்று ஒருநாள் மட்டும் அல்ல, தமிழகத்தில் 23 இடங்களில் தளபதி விலையில்லா விருந்தகம் வாயிலாக தினமும் காலை வேளையில் இலவச உணவு வழங்கப்படுகிறது. தளபதி சொல்லிட்டாருனா அடுத்த நொடி பணி ஆற்றுவோம்” என்று கூறினார்.

அப்பொழுது, அவரிடம் செய்தியாளர் ஒருவர் ஜீன் 22 – த.வெ.க.,வின் முதல் பொதுக்கூட்டமா? என கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளித்த புஸ்ஸி ஆனந்த் “அன்றைய தினம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க இருக்கிறோம். பொதுக்கூட்டம் பற்றிய கேள்விக்கு ஏதுவாக இருந்தாலும் தலைவரே அறிவிப்பார்” என்றார்.

பின்னர், நாம் தமிழருடன் கூட்டணி அமையுமாச ? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், “தலைவர் விஜய் அனைத்து தரப்பிடமும் ஆலோசனை செய்து வருகிறார். எல்லா முடிவுகளையும் தலைவர் தான் எடுப்பார், ஒரே நிச்சயம் அறிவிப்பார்” என த.வெ.க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்தார்.

முன்னதாக, ஏழை, எளியோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் புகார் அளிப்பதற்கும், மேலும் சட்ட உதவி செய்வதற்கும் ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் இரண்டு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று  த.வெ.க கட்சி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

19 mins ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

23 mins ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

37 mins ago

கிடு கிடு உயர்வு! 58,000-த்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…

49 mins ago

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

1 hour ago

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

2 hours ago