பகல் நேரத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும்.., போக்குவரத்துத்துறை..!

Default Image

இரவு நேர பேருந்தில் முன்பதிவு செய்தவர்களுக்கு பகல் நேர பேருந்துகளில் மாற்றி வழங்கப்படாது என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள்  அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி வரை  இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என நேற்று தமிழக அரசு அறிவித்தது.

இரவு நேர ஊரடங்கின்போது தனியார் மற்றும் பொது போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதியில்லை. வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு பேருந்துகளில் ஞாயிறு மற்றும் இரவு நேர பயணங்களுக்கான முன்பதிவு கட்டணம் திருப்பி செலுத்தப்படும் எனவும் இரவு நேர பேருந்தில் முன்பதிவு செய்தவர்களுக்கு பகல் நேர பேருந்துகளில் மாற்றி வழங்கப்படாது என போக்குவரத்துத்துறை தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்