சென்னையில் பஸ், ரயில் இயக்க கூடாது.! வயதானவர்களை பாதுகாக்க வேண்டும்.!

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னையில் தளர்வுகள் தரக்கூடாது என்றும் பொது போக்குவரத்துக்கு பஸ் ரயில்களை இயக்க கூடாது எனவும் மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில், ஊரடங்கை நீடிப்பதா? இல்லை தளர்வு செய்யலாமா? என்பதை குறித்து மருத்துவ நிபுணர்களுடன் இன்று காலை முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை முடிந்தபின், செய்தியாளர்களை சந்தித்து பேசிய மருத்துவ குழு பிரதிநிதியான ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் பிரதீப் கவுர், தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா அதிக பாதிப்பு என்றும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக உள்ளது என்று கூறியுள்ளார்.

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது என்றும் 4 மாவட்டங்களை தவிர்த்து தளர்வுகளை தரலாம் என்று தெரிவித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் சென்னையில் தளர்வுகள் தரக்கூடாது என்றும் பொது போக்குவரத்துக்கு பஸ் ரயில்களை இயக்க கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். வழிப்பாட்டு தளங்களை திறக்கக்கூடாது.

கொரோனா பாதிப்பு நீடித்தால் பொதுமுடக்கத்தை முழுமையாக தளர்த்த முடியாது என்றும் படிப்படியாக தான் தளர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் கொரோனா சமூக பரவல் இல்லை. கொரோனாவில் இருந்து வயதானவர்களை குடும்ப உறுப்பினர்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பில் 77% சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டுமே உள்ளது என தெரிவித்துள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

4 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

4 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

4 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

4 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

5 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

5 hours ago