தமிழகத்தில் பேருந்துகள் ஓடாததால் மக்கள் கடும் அவதி ! தூத்துக்குடி, சிவகங்கையில் பேருந்துகள் முற்றிலும் நிறுத்தம்…..

Published by
Venu

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் 90 சதவீத அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் அங்கிருந்து வெளியூர் செல்லும் பயணிகள் நீண்ட நேரம் காத்துக் கிடக்கின்றனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு பல தனியார் பேருந்துகள் புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கு அனுமதியின்றி இயக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
 
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ராமநாதபுரத்தில் அரசு பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கடும் குளிரில் இரவு முழுவதும் பயணிகள் பேருந்து நிலையத்திலேயே காத்துக் கிடந்தனர்.
 
போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, சேலத்தில் வழக்கத்திற்கு மாறாக, குறைவான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் வெளியூர் செல்லும் பயணிகள் நீண்ட நேரம் காத்துக் கிடக்கின்றனர். வெளியூர் செல்ல பேருந்து கிடைக்காத பயணிகள் இரவுப் பொழுதை பேருந்து நிலையத்திலேயே கழிக்க நேரிட்டது.
 
கோவையில் அனைத்து பணிமனைகளிலும் பேருந்துகளை இயக்க ஊழியர்கள் மறுத்துள்ளதால், பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை கோட்டத்தில் உள்ள நீலகிரி, திருப்பூர் மாவட்ட பேருந்துகளும் பெரும்பாலும் இயக்கப்படவில்லை. இதனால் மொத்தமுள்ள 26 பணிமனைகளில் இருந்தும் பேருந்துகள் ஏதும் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
 
திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 50 சதவீதத்திற்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 13 பணிமனைகளில் இருந்தும் ஓரளவுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் குறைந்த அளவிலேயே அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதால், பயணிகள் நீண்ட நேரம் காத்துக் கிடக்கும் அவல நிலை உருவாகி உள்ளது. கன்னியாகுமரியில் 5 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. பாதுகாப்பு கருதி கேரள மாநிலப் பேருந்துகளும் எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி: போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வராததால் பல்வேறு இடங்களில் பேருந்து சேவை முற்றிலும் முடங்கியுள்ளது. தூத்துக்குடி, சிவகங்கை, பெரம்பலூரில், கடலூரில் உள்ளிட்ட இடங்களில் அரசு பேருந்துகள் இயக்கம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
source: dinasuvadu.com

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

12 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago