இன்று முதல் கன்னியாகுமரியில் பேருந்து சேவை தொடக்கம்

Published by
பாலா கலியமூர்த்தி

கன்னியாகுமாரி மாவட்டத்தில் இன்று முதல் தொடங்கியது பொதுப்போக்குவரத்து சேவை.

தமிழகத்தில் 5 ஆம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30 வரை நீடிக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து, மற்ற மண்டலங்களில் நேற்று முதல் அரசு பேருந்துகள் 50% பயணிகளுடன் மண்டலங்களுக்குளேயே இயக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 8 மண்டலங்களில் 6 மண்டலங்களில் நேற்று பேருந்து சேவை தொடங்கப்பட்டது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்துகள் இன்று காலை 6 மணி முதல் இரவு 09 மணி வரை இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் நேற்று விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். அதன்படி, அம்மாவட்டத்தில் பேருந்து சேவை காலை 6 மணி முதல் தொடங்கியது. ஒரு பேருந்தில் 20 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் சமூக இடைவெளி மிக முக்கியம், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும், அரசு பேருந்தில் வழக்கமாக கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் கன்னியாகுமாரி பேருந்து நிலையத்திலுள்ள மார்க்கெட் இடம் மாற்றம் செய்யப்பட்டு இருந்ததால் நேற்று இயக்க முடியவில்லை. ஆனால் அந்த பணி நிறைவடைந்ததையொட்டி பேருந்துகள் இன்று இயக்கப்படும் என்றும் அரசு பேருந்துகளில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

விசாகப்பட்டினத்தில் சுவர் இடிந்து விழுந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு.!

விசாகப்பட்டினத்தில் சுவர் இடிந்து விழுந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு.!

விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…

16 minutes ago

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…

8 hours ago

சாட்ஜிபிடியை ஓரம் கட்ட ஸ்கெட்ச் போட்ட மார்க் ஜுக்கர்பெர்க்! போட்டியில் களமிறங்கிய Meta AI ஆப்!

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…

9 hours ago

திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா…டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

10 hours ago

“200 தொகுதிகளுக்கும் மேல் வெல்வோம்” தமிழிசைக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்!

சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…

11 hours ago

என்னுடைய மனைவி தான் தூண்…பத்மபூஷன் விருது வாங்கிய அஜித் எமோஷனல்!

டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

12 hours ago