அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு தான் திமுக அரசு தற்போது ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், நேற்று கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், பேசிய அவர், இந்தியாவில் சூப்பர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் லஞ்சம் வாங்குவதில் தான் சூப்பராக இருக்கிறார்.
இந்த ஆட்சியில் கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் ஆகியவற்றை திமுக துல்லியமாக செய்து வருகிறது. அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு தான் திமுக அரசு தற்போது ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கிறது.
தமிழகத்தில், சட்ட ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது என்றும், போதைப்பொருள் தாராளமாக கிடைக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். தற்போது மின்கட்டணம் அதிகரித்துள்ளது. இன்னும் ஒரு சில மாதங்கள் பேருந்து கட்டணம் உயிரும் என்றும் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட பொங்கல் தொகுப்பு யாராலும் மறக்க முடியாது என்று விமர்சித்த அவர், நாட்டு மக்களை நம்பி ஏமாற்றிக் கொள்ளையடிக்கும் அரசாக திமுக அரசு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…