மாதவராத்தில் பற்றி எரியும் தீ ! தீயை அணைக்க 500 வீரர்கள் போராட்டம்

Default Image

மாதவராத்தில்  ஏற்பட்டுள்ள தீ விபத்தை அணைக்க 3 மணி நேரமாக தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். 

சென்னையில் உள்ள மாதவரம் ரவுண்டானா பகுதியில் ரசாயன கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது . 15 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயைஅணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் 20மெட்ரோ தண்ணீர் லாரிகள் உதவியுடன் சுமார் 3 மணி நேரமாக தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இது குறித்து தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறுகையில்,500 வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். மாதவரம் ரவுண்டானா பகுதியில் ரசாயனக் கிடங்கில் ஏற்பட்டுள்ள தீ விபத்து குறித்து மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் தீ அணைக்கப்படும் என நம்புகிறோம் என்று   சைலேந்திரபாபு  தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்