#Burevi Cyclone : டிச.3ம் தேதி 5 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு!

Tenkasi, Nellai, Thoothukudi, Pudukottai and Kanyakumari districts will receive heavy to very heavy showers.

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டையை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களிலும், கனமழை முதல் அதீத கனமழை வரை பெய்யக் கூடும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நிவர் என்னும்  புயல் கரையை கடந்த நிலையில், இந்த புயலினால் ஏற்பட்ட வடுக்கள் இன்னும் மறையவில்லை. அதற்குள்ளாக தற்போது வங்கக்கடலில் புதியதாக உருவாகவுள்ள புரவி புயலானது, நாளை இலங்கை திரிகோணமலை அருகே கரையை கடக்கும. இந்த புயல் மன்னார் வளைகுடா பகுதிக்கு வந்து, பின்னர் குமரி பகுதிக்கு வருகிறது.

இதன்காரணமாக, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டையை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களிலும், கனமழை முதல் அதீத கனமழை வரை பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.