புரெவி புயல், தற்பொழுது பாம்பனுக்கு கிழக்கு-வடகிழக்கு பகுதியில் 40 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளதாகவும், மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், புயலாக வலுப்பெற்று, இலங்கை திரிகோணமலை பகுதியில் நேற்று இரவு கரையை கடந்தது. இதனையடுத்து இன்று இரவு அல்லது நாளை காலை பாம்பன் – குமரி இடையே கரையை கடக்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்பொழுது இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் திசை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், இந்த புரெவி புயல், தற்பொழுது பாம்பனுக்கு கிழக்கு-வடகிழக்கு பகுதியில் 40 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. மேலும், மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகரும் இந்த புயலால் குமரி, பாம்பன், ராமேஸ்வரம், மன்னார் வளைகுடா பகுதிகளில் 70-90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். அதன்பின் மேற்கு – தென்மேற்கு திசையில் நகரும் இந்த புயலானது, இன்று இரவு அல்லது நாளை காலை பாம்பன்-கன்னியாகுமரி இடையே கரையைக் கடக்கும்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…