இன்று தாக்கலாகும் பட்ஜெட்:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் முழுமையான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக திட்டம்:
இந்த நிலையில், காலை 10 மணிக்கு கூடும் சட்டமன்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது, எஸ்.பி வேலுமணி தொடர்புடைய இடங்களில் ரெய்டு, பால் பொருட்கள் விலை உயர்வு, நகைக்கடன் தள்ளுபடி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப அதிமுக திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக ஆலோசனை:
இதனிடையே, தலைமை செயலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் அறையில் அதிமுக எம்எல்ஏகளுடன் ஓபிஎஸ், இபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக சார்பில் எழுப்பவேண்டிய கேள்விகள், சிறப்பு கவன ஈர்ப்பு போன்றவை குறித்து ஆலோசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடப்படுகிறது.
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…