2018-2019ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசு பட்ஜெட் விரைவில் தாக்கல்?

Default Image

வரும் 15ஆம் தேதி  2018-2019ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் இறுதி வாரத்திலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாகும். இந்நிலையில், வரும் 2018-2019ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து ஏற்கெனவே அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில் வரும் 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் பங்கேற்கும் மாநாடு, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெறுகிறது.

இதன் பிறகு, 2018-2019ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் மார்ச் 15ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்று மாலையில் நடைபெறும் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்றும், துறைவாரிய மானியக் கோரிக்கைகளை எந்தெந்த நாட்களில் தாக்கல் செய்வது ஆகியவை குறித்து முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்