தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வெங்காயம் விலை ஏற்ற , இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.வெங்காயம் அதிகம் விளைச்சல் ஆகும் மகாராஷ்டிரா , கர்நாடக மற்றும் ஆந்திர ஆகிய மாநிலக்களில் பெய்த கனமழையால் வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டது.
இதனால் தமிழகத்தில் வெங்காயத்தின் விலை உச்சத்தை எட்டி உள்ளது.சென்னை கோயம்பேடு , ஒட்டன்சத்திரம் போன்ற முக்கிய காய்கறி சந்தைகளில் வெங்காய வரத்து குறைந்து உள்ளது.இதனால் ஹோட்டல்களில் உணவு தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
அதிலும் முக்கியமாக பிரியாணி சமைக்க அதிக வெங்காயம் தேவை என்பதால் பிரியாணி கடைக்காரர்கள் வேதனையில் உள்ளனர்.தமிழகத்தில் வெங்காயத்தின் விலை உயர்ந்து உள்ளதால் பிரியாணியின் விலையும் கணிசமாக உயர்ந்து உள்ளது.
இந்நிலையில் சென்னையில் உள்ள நடுத்தர உணவகங்களில் சிக்கன் பிரியாணி ரூ.200 , மட்டன் பிரியாணி ரூ.250 க்கும் விற்பனை ஆகிறது.சிறிய மற்றும் சாலையோர கடைகளில் சிக்கன் பிரியாணி ரூ.120-150 வரையும் , மட்டன் பிரியாணி ரூ.150-180 வரையும் விற்பனை ஆகிறது.
நட்சத்திர உணவகங்களில் சிக்கன் பிரியாணி ரூ.300 , மட்டன் பிரியாணி ரூ.350 க்கும் விற்பனை ஆகிறது.பிரியாணியின் விலை உயர்ந்து உள்ளதால் பிரியாணி பிரியர்கள் கவலையில் உள்ளனர்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…