150 கிடாய் வெட்டி, 300 கோழி அறுத்து கோலாகலமாக நடைபெற்ற பிரியாணி திருவிழா.! கூட்டம் கூட்டமாக கலந்துகொண்ட பக்தர்கள்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடுகம்பட்டி முனியாண்டி சுவாமி கோவில் 85-ம் ஆண்டு பிரியாணி திருவிழா நடைபெற்றது.
  • நிர்வாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150 ஆடுகள் மற்றும் 300ற்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிட்டு, கோவில் வளாகத்திலியே அசைவ பிரியாணி சமைக்கப்பட்டு, கிராம மக்களுக்கு அசைவ பிரியாணி விநியோகம் செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடுகம்பட்டி முனியாண்டி சுவாமி கோவில் 85-ம் ஆண்டு பிரியாணி திருவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஸ்ரீ முனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்தி வரும் உரிமையாளர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர். இதனையொட்டி நடத்தப்பட்ட ஊர்வலத்தில் பெண்கள், தேங்காய் மற்றும் பூத்தட்டு தலையில் சுமந்தபடி கோவிலுக்கு எடுத்துச்சென்று பூஜை செய்து வந்தனர்.

இவ்விழாவின் நிர்வாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150 ஆடுகள் மற்றும் 300ற்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டு, பின்னர் கோவில் வளாகத்திலியே அசைவ பிரியாணி சமைக்கப்பட்டது. இதனையடுத்து கோவில் வளாகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்த கிராம மக்களுக்கு அசைவ பிரியாணி விநியோகம் செய்யப்பட்டது.

இதனை பெற்றிட மக்கள் போட்டிபோட்டு பிரியாணியை பெற முயன்றதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கிருந்த போலீசார் கூட்டத்தை சரிப்படுத்தி  பிரியாணியை விநியோகம் செய்ய உதவினர். பிரியாணி அன்னதானத்தில் கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாப்பட்டி, உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு பிரியாணி பிரசாதத்தை பெற்று சென்றனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…

10 hours ago

“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!

சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…

10 hours ago

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

11 hours ago

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…

12 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…

12 hours ago

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

13 hours ago