நகை கடன் தள்ளுபடி குறித்த கேள்விக்கு கல்யாணமாகி 60 நாட்களில் குழந்தை பிறந்து விடுமா? என அமைச்சர் பெரியசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த மே 7-ஆம் தேதி அன்று தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றார். அவர் முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முக்கியமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், திமுக தேர்தலின்போது நீட் தேர்வு ரத்து, நகை கடன் தள்ளுபடி, குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை மற்றும் பல அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் சேலத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவரிடம் நகை கடன் தள்ளுபடி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், கல்யாணமாகி 60 நாட்களில் குழந்தை பிறந்து விடுமா? நகை கடன் நிச்சயம் தள்ளுபடி செய்யப்படும். குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்க தேர்தல் சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி விரைவில் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…