திமுக தலைவர் கருணாநிதி மரணத்துக்கு பின், முக.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பெற்றதும் பதவி போட்டியில் முக.ஸ்டாலினும் , முக.அழகிரியும் மோதிக்கொள்ள தொடக்கி விட்டனர்.அழகிரியை திமுகவில் இணைக்காமல் இருப்பதால் அழகிரி தனக்கான செல்வாக்கை நிரூப்பிக்க கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றார்.இதனால் திமுக தலைமை செய்வதறியாது உள்ளதாக திமுக வட்டாரங்கள் முனகிக்கொண்டு இருக்கிரார்கள்.
திமுகவில் தன்னை சேர்த்துக் கொள்ள வேண்டும் என போர்க்கொடி தூக்கியிருக்கும் மு.க. அழகிரிக்கு, தென் மண்டலத்திலேயே ஆதரவு இல்லை என அக்கட்சி தலைமை கூறி வருகிறது. ஆனால், மெல்ல மெல்ல அழகிரி ஆதரவாளர்கள் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளனர்.
ஐ.பெரியசாமியின் குடும்பத்தின் கீழ்தான் திண்டுக்கல் மாவட்ட திமுக இருந்தாக வேண்டிய நிலை. இப்படிப்பட்ட சூழலில், மு.க.அழகிரி பேரவை திண்டுக்கல் மாவட்டத்தில் முளைத்திருக்கிறது. இந்த புயல், திமுகவை ஜாதிகள் ரீதியாக பிளவுபடுத்தும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. தனது சமூகமான தேவர் சமூகத்துக்கே ஐ.பி. அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்; திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பான்மையினராக இருக்கும் ஒக்கலிகா கவுடா மற்றும் கொங்கு வேளாள கவுண்டர்களையும் செட்டியார், வன்னியர், அம்பலகாரர் ஆகிய சமூகத்தினரையும் நீண்டகாலமாக புறக்கணித்து வருகிறார் என்பதே அழகிரி பேரவைக்கு அடிக்கல் நாட்டியிருப்போரின் குற்றச்சாட்டு.
இதனால் திமுகவில் உள்ள ஒக்கலிகா கவுடர்களும் அதிமுக வேட்பாளர் பரமசிவத்துக்கே வேலை செய்ததுடன் குடும்பம் குடும்பமாக வாக்களித்தனர். இதனால் பரமசிவம் வெற்றி பெற்றார்.
அதேபோல், திமுக ஆட்சிக் காலங்களில் பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசு பணிகளில் சத்துணவுப் பணியாளர், சத்துணவு ஆயா போன்ற கீழ்நிலை பணிகளே வழங்கப்பட்டிருக்கின்றன. இத்தனைக்கும் ஆத்தூர் தொகுதியில் 60% ஒக்கலிகா கவுடர்கள் இருக்கின்றனர். அவர்கள்தான் ஐ.பெரியசாமியை காலந்தோறும் ஜெயிக்க வைக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை.இந்த நிலை ஒட்டன்சத்திரம், பழனி தொகுதிகளில் உள்ள கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தினருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதனால் திண்டுக்கல் மாவட்ட திமுக, இப்போது தேவர் vs ஒக்கலிகா கவுடர் + கொங்கு வேளாள கவுண்டர் என பிரிந்து கிடக்கிறது.
DINASUVADU
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…