கொரோனா தடுப்பூசி போடாதவர்களால்தான் கொரோனா வைரஸ் உருமாற காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதத்தை முன் வைத்துள்ளது.
தடுப்பூசி கட்டாயம் – இதற்கு எதிரானது:
தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என தமிழகம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் அறிவித்து இருப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.மேலும்,தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக் கொள்ள சொல்வது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என அறிவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.இதன்காரணமாக, மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பட்டிருந்தது.
உச்சநீதிமன்றம்:
இந்நிலையில்,இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில்,தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் பல்வேறு வாதங்களை முன்வைத்து வருகிறார்.அதன்படி,தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தியே தடுப்பூசியை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வாதம்:
ஒரு பேரிடர் இருக்கும்போது அதனைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை வேண்டுமானலும் எடுக்கலாம் என்பது மாநில அரசுக்கு இருக்கும் அதிகாரம்.எனவே,அதனை பயன்படுத்திதான் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கியுள்ளோம்.
ஆனால்,தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வருவதால்தான் கொரோனா வைரஸ் ஆனது உருமாற்றம் அடைகின்றன.எனவே,இதனால் மீண்டும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகவே தடுப்பூசியை கட்டாயமாக்கியிருக்கிறோம்.மேலும்,மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி 100% தடுப்பூசி போடப்படுவது உறுதி செய்யப்படுகின்றது”,என்று வாதிட்டு உள்ளார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…