அதிமுகவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி சலசலப்புடன் நடைபெற்ற நிலையில்,அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார்.இதனைத் தொடர்ந்து, அதிமுகவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதனிடையே,23 தீர்மானங்களை தவிர மற்ற எந்த தீர்மானங்களும் நிறைவேற்றக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில்,அந்த உத்தரவை மீறி பொதுக்குழு தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டது நீதிமன்ற அவமதிப்பு என ஓபிஎஸ் ஆதரவாளரும் பொதுக்குழு உறுப்பினருமான சண்முகம் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,தமிழ் மகன் உசேனை அவைத்தலைவராக நியமித்தது செல்லாது என அறிவிக்க கோரியும்,ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது.ஆனால்,கடந்த ஜூன் 22 ஆம் தேதி நள்ளிரவு விசாரணையின்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள், ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவுக்கு மட்டுமே பொருத்தும் என உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும்,ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என இந்த முறையீட்டில் கோரிக்கை வைக்க முடியாது எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில்,அடுத்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி தனி நீதிபதியை அணுக வேண்டும் என ஓபிஎஸ் தரப்புக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இந்நிலையில்,ஜூலை 7 ஆம் தேதிக்கு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.இந்த வழக்கை ஒத்தி வைக்க கோரிய ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை ஏற்று,பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.மேலும்,நிரந்தர அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டது நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது எனவும்,அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக வரும் 7 ஆம் தேதி ஈபிஎஸ் பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…