#Breaking:விளையாட்டு சங்கங்களில் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை? – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published by
Edison

தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க அனுமதிக்கவில்லை என்று தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்திற்கு எதிராக வட்டு எறிதல் வீராங்கனை ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு கடந்த ஜனவரி மாதம் விசாரிக்கப்பட்ட நிலையில்,நிதியுதவி அளித்தார்கள் என்பதற்காக விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளாக அரசியல்வாதிகள்,தொழிலதிபர்கள் ஆகியோரை நியமிக்கக்கூடாது என்றும்,மாறாக விளையாட்டு சங்க நிர்வாகிகளாக விளையாட்டு வீரர்களையே நியமிக்க வேண்டும் .இது தொடர்பாக சட்டம் வகுக்கும் வரை நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் எனவும் தனிநீதிபதி மகாதேவன் உத்தரவிட்டிருந்தார்.

இதனை எதிர்த்து தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்நிலையில்,இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்த நிலையில்,விளையாட்டு சங்கங்களில் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை? என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும்,வீரர்கள் மிக மோசமான முறையில் நடத்தப்படுகின்றனர்,மேலும் விளையாட்டு வீரர்களுக்கான வசதிகளை பறிக்கவே விளையாட்டு சங்கங்களில் அரசியல் வாதிகள் நுழைகின்றனர்,அதே சமயம்,விளையாட்டு பயிற்சியாளர்களின் நடத்தை குறித்து நீதிமன்றத்தில் கூற முடியவில்லை எனக் கூறிய உயர்நீதிமன்றம்,தனி நீதிபதி உத்தரவில் என்ன தவறு உள்ளது? என தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்திடம் கேள்வி எழுப்பியது.

இதனையடுத்து,தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை உடனே அமல்படுத்த வேண்டும் என்று கூறிய உயர்நீதிமன்றம்,  தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கை முழுமையாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

 

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

4 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

5 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

6 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

6 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago