பொங்கல் தொகுப்பில் ஊழல், தரமற்ற பொருட்களை வழங்கியதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அப்பட்டமான பொய் கூறுவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலைத்துறை சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெற்ற பொருள்களின் அளவு குறைந்தும், தரமற்றதாகவும் விநியோகிக்கப்பட்டது.
சுமார் ரூ.1,300 கோடி மதிப்பில் பொங்கல் தொகுப்பில் இடம்பெற்ற பொருள்கள் கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கப்பட்டு இருந்த போதும் சுமார் ரூ.500 கோடி மதிப்பில் மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சக்கரபாணி, குறுகிய காலத்தில் 2.5 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் தரமாக வழங்க உரிய விலைப்புள்ளி கோரப்பட்டது. இந்நிலையில், பொங்கல் தொகுப்பில் ஊழல், தரமற்ற பொருட்களை வழங்கியதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அப்பட்டமான பொய் கூறுவதாக தெரிவித்துள்ளார். மேலும், வெளிப்படையான டெண்டரால் ஒரு கொள்முதலில் ரூ.74.75 கோடி மீதப்படுத்தப்பட்டுள்ளது என்றும், ஆதாரமற்ற குற்றசாட்டை முன்வைத்துள்ள ஈபிஎஸ் என்னுடன் விவாதிக்க தயாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொல்கத்தா : கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் சமயத்தில் சில ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் மைதானத்தில் உள்ள பாதுகாப்பை மீறி தங்கள்…
டெல்லி : கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி டெல்லியில் உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் நடந்த தீ விபத்து சம்பவம்,…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்கள் எதிநோக்கும் மிக முக்கிய போட்டியான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ்…
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான முதல் ஐபிஎல் போட்டி இன்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா…
கொல்கத்தா : கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்த வீரர்களில் பில் சால்ட் ஒருவர்.…
கொல்கத்தா : கடந்த சீசன் ஐபிஎல் போட்டியில் வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக விளையாடிய காரணத்தால் இந்த முறை அவரை கொல்கத்தா…