#Breaking : பதற்றத்தில் கோவை.! ஆட்சியர், எஸ்பி, காவல் ஆணையர் உடன் ஐஜி சுதாகர் அவசர ஆலோசனை.!

Default Image

கோவையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்தும், அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்தும், மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. 

என்.ஐ.ஏ சோதனையை அடுத்து, கோவையில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு, பொதுச்சொத்துக்கள் சேதம் என பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் கோவையை சுற்றி காவலர்கள் மட்டுமின்றி, அதிரடி படையினர், கமாண்டோ படையினர் பாதுகாப்பிற்காக குவிந்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது, மேற்கு மண்டலா ஐஜி சுதாகர் தலைமையில் கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவை ஆட்சியர்  ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கோவை எஸ்.பி பத்ரிநாத் மற்றும் முக்கிய அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவை மாநகரில் அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விசாரணைகள் உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்க உள்ளனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்