அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தமாட்டோம் என ஈபிஎஸ் தரப்பு உத்தரவாதம் என சிவி சண்முகம் பேட்டி.
ஜூலை 11-ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் தொடந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, ஓபிஎஸ் தரப்பு கூறுகையில், அதிமுகவின் அனைத்து பதவிகளையும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் தான் நியமிக்க முடியும். அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டதே விதிமுறைகளுக்கு எதிரானது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு 15 நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டும், ஆனால் அது தவறப்பட்டுள்ளது என வாதம் முன்வைக்கப்பட்டது. இதன்பின் இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கும்போது அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு இபிஎஸ் அவசரப்படுவது ஏன்? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த தடை விதித்தது உச்சநீதிமன்றம்.
இதன்பின் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தமாட்டோம் என உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை முடியும் வரை பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தமாட்டோம் அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு மீதான இறுதி விசாரணை நவம்பர் 21-ல் நடக்கிறது. தசரா விடுமுறைக்கு பிறகு விசாரிக்கலாம் என கூறி, உச்சநீதிமன்றம் ஈபிஎஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டது என தெரிவித்தார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…