#BREAKING: நீர்நிலைகள் நிலங்களை பதிவு செய்ய கூடாது – உயர் நீதிமன்றம் உத்தரவு..!

Default Image

ஆக்கிரமிப்புகளை தவிர்க்க பதிவுத்துறையினர் நீர்நிலைகள் நிலங்களை பதிவு செய்ய கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்து 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டது. அனைத்து மனுக்களிலும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும். நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். இதுகுறித்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.  இந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் ஆக்கிரமிப்புகளை தவிர்க்க பதிவுத்துறையினர் நீர்நிலைகள் நிலங்களை பதிவு செய்ய கூடாது. ஆக்கிரமிப்பு இல்லை என அறிவிப்பு பெற வேண்டும். அறிவிப்பு இல்லாமல் சொத்துவரி, மின், குடிநீர் இணைப்பு வழங்க கூடாது. அனுமதி கோரும் கட்டிடம் நீர்நிலைகளில் இல்லை என ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். நீர்நிலைகளில்  ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு ஒப்புதல் வழங்கியிருந்தால் அதிகாரிகள் மீது ஒழுங்கு மற்றும் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்