#BREAKING : வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு- தேர்தல் ஆணையரிடம் மு.க.ஸ்டாலின் நேரில் புகார்

Default Image
  • மாநில தேர்தல் ஆணையருடன் திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்துள்ளார்.
  • வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு என்று புகார் அளித்துள்ளார். 

சென்னை மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர மீதமுள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 97 ஆயிரத்து 975 பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடைபெற்று முடிந்தநிலையில் இன்று 315 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தேர்தல் ஆணையர் பழனிசாமியை நேரில்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார்.அவரை சந்தித்து உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றதாக புகார் அளித்துள்ளார் .

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்