#BREAKING : முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை வழங்கிய விஸ்வநாதன் ஆனந்த்..!

Default Image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் வழங்கினார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா பிரமாண்டமாகவும், கோலகமாகவும் நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் மற்றும் முதல்வர் பாரம்பரிய உடையுடன் மேடையில் அமர்ந்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் வழங்கினார். அதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒலிம்பியாட் ஜோதியை வழங்கினார்.

அதன்பின், இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா உட்பட 3 பேர் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஏற்றி வைத்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்