#Breaking:விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கு – 4 சிறார்களுக்கு ஜாமீன்!

Default Image

விருதுநகர்:பட்டியலின இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான நான்கு சிறார்களுக்கு ஜாமீன்.

விருதுநகரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஹரிஹரன், ஜுனைத் அகமத், மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து,சிபிசிஐடி போலீசார் கைது செய்திருந்தனர்.

அதன்பின்னர்,இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஹரிஹரன்,ஜூனைத், மாடசாமி, பிரவீன் மற்றும் 4 பள்ளி மாணவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர்.இதனையடுத்து,பள்ளி மாணவர்கள் தவிர மற்ற 4 பேருக்கும் வரும் 18 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விடுக்கப்பட்டது.எனினும்,கைதான எட்டு பேரில் நான்கு பேர் பள்ளி மாணவர்கள் என்பதால் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில்,விருதுநகரில் பட்டியலின இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான நான்கு சிறார்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.சிறார் நீதி குழும நீதிபதி மருதுபாண்டியன் அவர்கள் நான்கு சிறார்களுக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்