#BREAKING: நாளை முதல் தமிழகத்தில் மிக கனமழை.. மீனவர்களுக்கு எச்சரிக்கை – வானிலை மையம் அறிவிப்பு

Default Image

தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு.

நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இதுபோன்று வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை 5 மாவட்டணைகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவ்வ்ர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்