#BREAKING: வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்தல் – அதிமுக வெற்றி

Default Image

கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி.

அடிதடி, ரகளைகளுக்கிடையே கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தலில் அதிமுகவின் மருதாசலம் வெற்றி பெற்றார். இதுபோன்று வெள்ளலூர் பேரூராட்சியின் துணை தலைவர் தேர்தலில் அதிமுகவின் கணேசன் தேர்வு செய்யப்பட்டார். ரகளை, மோதல், போலீஸ் தடியடிக்கு இடையே கோவை வெள்ளலூர் பேரூராட்சிக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது. முன்னதாக தேர்தல் நடைபெற்றபோது, திமுக – அதிமுக இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் போலீஸ் தடியடி நடத்தி பிரச்சனை செய்தவர்களை விரட்டியடித்தனர்.

இதுதொடர்பான செய்தியை தெரிந்துக்கொள்ள “வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்தலில் மோதல் – கவுன்சிலரின் கணவர் மண்டை உடைப்பு” என்பதை க்ளிக் செய்யவும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்