#BREAKING : தமிழகத்திற்கு தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும்….! மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்…!

Default Image

தமிழகத்திற்கான கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், தடுப்பூசி போட மக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்திற்கான கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ்வர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் அந்த கடிதத்தில், மாநிலத்தடுப்பூசி ஒதுக்கீட்டில் அரசு மருத்துவமனைகள் உள் ஒதுக்கீட்டை 90% ஆக உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்