#BREAKING: தமிழகத்தில் ஒரே நாளில் தடுப்பூசி இலக்கான 20 லட்சத்தை தாண்டியது!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி இலக்கான 20 லட்சத்தை தாண்டி தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி இலக்கான 20 லட்சத்தை தாண்டி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது. அதன்படி, மாநிலம் முழுவதும் சுமார் 40,000 தடுப்பூசி முகாம்கள் மூலம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இரவு 7 மணி வரை முகாம்கள் நடைபெற உள்ள நிலையில், மாலை 4 மணியளவில் 20 லட்சம் இலக்கு எட்டப்பட்டது. இன்று மட்டும் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், மாலை 4.23 மணி நேரப்படி 20.11 லட்சம் பேருக்கு, மேல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பல இடங்களில் ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகள் தீர்ந்துவிட்டன என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்த முன்வந்த மக்களுக்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.

மேலும் இன்று தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள சிறப்பு முகாம் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Recent Posts

“தமிழ்நாட்டில் எந்த விதத்திலும் மதவாதம் நுழைய முடியாது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.!

“தமிழ்நாட்டில் எந்த விதத்திலும் மதவாதம் நுழைய முடியாது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…

12 minutes ago

காஷ்மீர் தாக்குதல் : பிபிசி தொலைக்காட்சி மீது மத்திய அரசு அதிருப்தி.!

டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…

35 minutes ago

தமிழ்நாடு போலீசுக்கு நாங்க என்னென்ன செய்திருக்கோம் தெரியுமா? முதலமைச்சர் போட்ட பட்டியல்…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…

40 minutes ago

அடிக்குற வெயிலுக்கு மழை அப்டேட்.! இந்த 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!

சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…

1 hour ago

கேரள முதல்வர் பினராயி விஜயனின் அலுவலகம், வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த…

1 hour ago

முடிந்தது விசா கால கெடு.., புதுச்சேரியில் பாகிஸ்தான் பெண் மீது வழக்கு.!

புதுச்சேரி : காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாடுமுழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு…

2 hours ago