கழிவறை தொட்டியில் விழுந்து இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவத்தில் இரு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு.
பேரூராட்சி கழிவறை (செப்டிக் டேங்) தொட்டியில் விழுந்து இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமி, இளநிலை பொறியாளர் வீரமணி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். தேனி மாவட்டம் பண்ணைபுரம் பேரூராட்சியின் கழிவறை தொட்டியில் தவறி விழுந்து சிறுமிகள் சிறுவர் உயிரிழந்தனர். பண்ணைப்புரத்தில் 1-ம் வகுப்பு படித்து வந்த சுபஸ்ரீ (6), நிகிதாஸ்ரீ (7) ஆகிய சிறுமிகள் நேற்று மாலை பேரூராட்சியின் கழிவுநீர் தொட்டி மீது ஏறி விளையாடியதாக கூறப்படுகிறது. அப்போது, கழிவுநீர் தொட்டியின் மூடி பழுதாகி இருந்ததால், அதன் மீது மிதித்ததில் மூடி உடைந்து எதிர்பாராதவிதமாக சிறுமிகள் 2 பேரும் தொட்டிக்குள் தவறி விழுந்தனர்.
இதையடுத்து இளைஞா்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த சிறுமிகளை மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பேரூராட்சியின் அஜகார்த்தியான செயலுக்கு கண்டனம் தெரிவித்து சிமிகளின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.கழிவறை தொட்டியின் ஸ்லாப் பழுது குறித்து பலமுறை புகார் அளித்தும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் இரு சிமிகள் உயிரிழந்துள்ளனர் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பேரூராட்சி செயல் அலுவலர், இளநிலை பொறியாளர் வீரமணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…