#BREAKING: மதுரை மாட்டுத்தாவணியில் ‘டைடல் பார்க்’ – முதலமைச்சர் அறிவிப்பு

Default Image

மதுரையில் டைடல் நிறுவனம் மற்றும் மாநகராட்சி இணைந்து ‘டைடல் பார்க்-ஐ’ அமைக்கிறது என முதலமைச்சர் அறிவிப்பு

மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் “தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” மாநாடு துவங்கி நடைபெற்று வருகிறது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடக்கும் தென்மண்டல மாநாட்டில் தொழில்துறையின் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மதுரை மாட்டுத்தாவணியில் ‘டைடல் பார்க்’ அமைக்கப்பட உள்ளது என அறிவித்துள்ளார்.

மதுரையில் டைடல் நிறுவனம் மற்றும் மாநகராட்சி இணைந்து 5 ஏக்கரில் ‘டைடல் பார்க்’ அமைக்கப்பட உள்ளது என கூறிய முதலமைச்சர், மாட்டுத்தாவணி பகுதியில் 2 கட்டமாக தொடங்கப்படும் திட்டத்திற்கு, முதல் கட்டமாக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது என்றும் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்தார். ‘டைடல் பார்க்’  மதுரை மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் தொழிநுட்பத்தின் முக்கிய மையமாக மதுரையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்