#BREAKING: தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை- அமைச்சர் மா.சுப்ரமணியன்..!

Published by
murugan

நண்பகல் 12 மணிக்கு மேல் தமிழகம் முழுவதிலும் தடுப்பூசி இல்லை என்ற தட்டுப்பாடு ஏற்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அரங்கத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டது. அப்போது, பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தடுப்புசி செலுத்த மக்களிடையே ஆர்வம் இருந்தாலும் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தமிழகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த தமிழர்களும் தயாராக இருக்கிறார்கள்.

கிராமபுறங்களில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் மலைவாழ் கிராப்புறகளில் உள்ளவர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ள தயாராக உள்ளனர். ஆனால், தடுப்பூசி தான் இல்லை என்கின்ற நிலை உள்ளது. இதுவரை தமிழகத்திற்கு ஒரு கோடியே 44 லட்சத்து 39 ஆயிரத்து 940 தடுப்பூசிகள், இதுவரை நாம்  செலுத்தியிருப்பது என்பது ஒரு கோடியே 41 லட்சத்து 50 ஆயிரத்து 249 தடுப்பூசிகள். தற்போது கையில் இருப்பது 2 லட்சத்து 7 ஆயிரத்து 345 தடுப்பூசிகள் உள்ளது.

கையில் உள்ள இரண்டு லட்சம் தடுப்பூசியில் பாதி தற்போது முடிந்து இருக்கும். இதனால் நண்பகல்12 மணிக்கு மேல் தமிழகம் முழுவதிலும் தடுப்பூசி இல்லை என்ற தட்டுப்பாடு ஏற்படும் என தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…

18 mins ago

மாப்ள – மச்சான் இடையிலான உறவு.. கவனம் ஈர்க்கும் ‘மெய்யழகன்’ ட்ரெய்லர்.!

சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…

38 mins ago

துலிப் டிராபி : சாம்பியன் பட்டம் வென்று “இந்தியா-A” அணி அசத்தல் !

அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…

52 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…

2 hours ago

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

2 hours ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

3 hours ago