தமிழ்நாடு தேர்தல் ஆணையம் கோரிக்கையை ஏற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு 4 மாத கால அவகாசம் வழங்கிய உச்சநீதிமன்றம்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு மார்ச்க்குள் நிறைவடைந்துவிடும். எனவே, தேர்தலை நடத்துவதற்கு கால அவகாசம் கட்டாயம் வழங்க வேண்டும் என்று வழக்கு விசாரணை வருவதற்கு முன்பே உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்தது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெறுவதற்கு இரண்டரை மாதம் தேவைப்படும் என்றும் கூறியது. இந்த நிலையில், தற்போது வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 4 மாத கால அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்.
தமிழ்நாடு தேர்தல் ஆணையம் கோரிக்கையை ஏற்று 4 மாத கால அவகாசத்தை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று வழக்கு தொடர்ந்த மனுதாரர் தேர்தல் ஆணையத்துக்கு அவகாசம் வழங்கலாம் என கூறிய நிலையில், உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும், தேர்தலை தள்ளிவைக்க தேர்தல் ஆணையம் சொல்லும் காரணங்கள் மோசமானதாக உள்ளது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று கூறிய மனுதாரர், தற்போது அவகாசம் கேட்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…