#Breaking:”இந்த ரெய்டு பழிவாங்கும் நோக்கில் திமுக அரசால் நடத்தப்பட்டுள்ளது” -முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!

Published by
Edison

முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது குறித்து எந்தவொரு ரெய்டுக்கும்,பயப்படாத இயக்கம் அதிமுக என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியின் போது வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி வருமானத்திற்கு அதிகமாக ரூ.90 கோடி அளவிற்கு சொத்து குவித்ததாகக் எழுந்த புகாரின் பேரில் இன்று காலை 6.30 மணி முதல் கே.சி.வீரமணியின் சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில்,இந்த ரெய்டு பழிவாங்கும் நோக்கில் திமுக அரசால் நடத்தப்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும்,இதுதொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாது:”திமுக அரசு ஒரு பழிவாங்கும் நோக்கத்தோடு இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. எனவே,நீதிமன்றம் என்று ஒன்று இருக்கிறது.நிச்சயமாக நீதிமன்றத்தின் மூலம் நிரபராதி என்று நிரூபிப்போம்.

பொதுவாக அரசு ஒரு நடவடிக்கையை எடுக்கும்போது,அந்த நடவடிக்கையில் அவர்களுக்கு உற்ற துணையாக இருக்க சில அமைப்புகளுடன் கைக்கோர்த்துக் கொண்டு அந்த வகையில் இந்த மாதிரி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனாலேயே,நடவடிக்கையை நாங்கள் எடுக்கவில்லை,புகார் வந்தது என்று சாக்குபோக்கை அரசு கூறுகிறது.இது முழுக்க முழுக்க பழிவாங்கும் நோக்கில் உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் திமுக அரசு இந்த நடவடிக்கையை நடத்தியுள்ளது.

ஆனால்,எந்தவொரு ரெய்டுக்கும்,பயப்படாத இயக்கம் அதிமுக.புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் அம்மா அவர்கள் எவ்வளவோ சோதனைகளை தாங்கி அதனை சாதனைகளாக மாற்றினர்.அப்படிப்பட்ட இயக்கம்தான் அதிமுக,எனவே,காவல்துறையை வைத்து அச்சுறுத்தலாம்,கட்சியை முடக்கி விடலாம் என நினைப்பது,பூனையைக் கண்மூடிவிட்டால் அது உலகம் இருண்டு விட்ட கதை என்று அவர்கள் நினைக்கிறார்கள்.ஆனால், எத்தனை சோதனை வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயார்”,என்று கூறியுள்ளார்.

 

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

14 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

14 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

14 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

15 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

15 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

15 hours ago