சிறுமி கருமுட்டை வழக்கில் தனியார் ஸ்கேன் சென்டருக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு.
ஈரோடு சிறுமி கருமுட்டை வழக்கில் சுதா மருத்துவமனை ஸ்கேன் மையத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீலை அகற்றக்கோரி தனியார் மருத்துவமனை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவமனை மீதான குற்றச்சாட்டு குறித்து மீண்டும் விசாரித்து 12 வாரங்களில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு ஆணையிட்டுள்ளது. புதிய நோயாளிகளை சேர்க்க தடை விதித்த அரசு உத்தரவையும் ரத்து செய்தது உயர்நீதிமன்றம்.
இதனிடையே, 16 வயது சிறுமியின் வயதை 27 என மாற்றி, அவரிடம் 9 முறை கருமுட்டை எடுத்ததாக கூறி சுதா ஸ்கேன் சென்டர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனடிப்படையில் ஸ்கேன் சென்டரில் உள்ள உபகரணங்கள் மீது சீல் வைக்கப்பட்டது. இதை எதிர்த்து மருத்துவமனை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. உரிய நோட்டீஸ் கொடுத்து விளக்கம் பெறாமல் சீல் அவசவசரமாக வைக்கப்பட்டுள்ளது என குற்றசாட்டு வைக்கப்பட்டது.
இதுவரை தங்கள் மருத்துவமனை மீது எந்த புகாரும் இல்லை, இது திட்டமிட்ட மோசடி என்றும் தங்களுக்கு எதிராக பொய் புகாரின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை எனவும் நீதிமன்றத்தில் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு தமிழக தரப்பு கூறுகையில், சிறுமியின் வயதை மாற்றி கருமுட்டை எடுத்ததுவுடன், நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுத்தால் ஆதாரங்களை அழித்துவிட கூடும் என்பதால் தான், நோட்டீஸ் அனுப்பாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது என கூறியுள்ளது.
மேலும், பொதுமக்கள் நலன் கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. ஆனால், இதனை ஏற்க மறுத்த நீதிபதி, 35 ஆண்டுகளாக சுதா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. முந்தைய காலத்தில் மருத்துவமனை மீது எந்த புகாரும் இல்லை. கருமுட்டை விவகாரம் தொடர்பாக மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்க அவகாசம் வழங்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டது தவறு என்று கோரிக்கை சீலை அகற்ற உத்தரவிட்டார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…