BREAKING: தமிழர்கள் கவனத்திற்கு..! வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் திரும்ப இணையதளம்.!

Default Image

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப nonresidenttamil.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

உலகை அச்சுறுத்தும் காரணம் வைரஸ் காரணமாக இந்தியாவில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கடந்த 25-ம் தேதி முதல் சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து,  தமிழ்நாட்டை சேர்ந்த பல மாணவர்கள் , சுற்றுலாப்பயணிகள், வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் இந்தியா வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால் உடனடியாக தமிகத்திற்கு திரும்ப விரும்புவார்களின்  நலனுக்காகவும், அவர்களின் குடும்பத்தின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் எண்ணிக்கையை அறியும் வகையில் http://nonresidenttamil.org என்ற இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப nonresidenttamil.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமுடக்கத்தால் வெளிநாடுகளில்  சிக்கி உள்ள தமிழர்கள் எண்ணிக்கையை அறிய இந்த இணையதளம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு,  திரும்புவோரின் விபரங்கள் அறிய, அவர்களை தனிமைப்படுத்தி வசதி ஏற்படுத்த அரசு  இந்த இணையதள நடவடிக்கை எடுத்துள்ளது.

Image

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்