தனியார் மருத்துவ கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலித்தால் கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை.
அதிகம் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, தனியார் மருத்துவக் கல்லூரிகள் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கட்டண நிர்ணய குழு நிர்ணயித்த தொகைக்கு கூடுதலாக வசூலித்தால் தமிழ்நாடு அரசுக்கு புகார் தெரிவிக்கலாம். கடந்த கல்வியாண்டில் பல சுயநிதிக் கல்லூரிகள் கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகக் கட்டணம் கோருவதாக விண்ணப்பதாரர்களிடமிருந்து பல புகார்கள் வந்துள்ளன.
இந்த நிலையில், எந்தவொரு தனியார் மருத்துவ கல்லூரி நிறுவனங்களும் 2022-23 கல்வியாண்டுக்கான எம்பிபிஎஸ்/பிடிஎஸ் கவுன்சிலிங்கின் ஏதேனும் சுற்றுகளில் விண்ணப்பதாரரை அனுமதிக்க மறுத்தால் மற்றும் கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் கோரினால், அந்த நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.
எனவே, அனைத்து சுயநிதி (self financing Institutions) நிறுவனங்களும் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றன. மேலும், இதுதொடர்பாக மாணவர்களிடம் இருந்து ஏதேனும் குறிப்பிட்ட புகார்கள் கிடைத்தால், அத்தகைய சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…