தமிழக சட்டப்பேரவையில் மார்ச் 18-ஆம் தேதி 2022-23-ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இதுபோன்று வேளாண் பட்ஜெட் மார்ச் 19-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்றும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்க கடந்த 5-ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இதற்கான வரைவு நிதிநிலை அறிக்கை ஏற்கெனவே தயாராகியுள்ள நிலையில், முதல்வர் தலைமையிலான இந்த அமைச்சரவை கூட்டத்தில் நிதிநிலை வரைவு அறிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டு, ஒப்புதலும் அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் நிதிநிலை அறிக்கை தொடா்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட நிலையில், 2022-23-ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 18-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.
மேலும் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து மார்ச் 18-ஆம் தேதி அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ…
சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…