தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் 13 ஆம் தேதி சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி, பொதுநிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.மேலும்,நிதிநிலை குறித்த அறிக்கைக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் தரப்படும் என்று தகவல் முன்னதாக வெளியாகியது.
இந்நிலையில்,தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையானது வருகின்ற சட்டப் பேரவையில் தாக்கல் செய்ய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 13 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். மேலும், முதல்வர் தலைமையிலான அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ளார் என்றும்,அவை,பொது பட்ஜெட்,வேளாண் பட்ஜெட் என தனித்தனியாக தாக்கல் செய்யப்படவுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…