#Breaking : மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு

Default Image
  • தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
  • தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்தவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் டிசம்பர் 27-ஆம் தேதி மற்றும் டிசம்பர் 30 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஆனால் மாநகராட்சி,நகராட்சி ,பேருராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும்  தேர்தல் நடைபெற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தாத தமிழக மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கறிஞர் ஜெய் சுகின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார். மேலும் அவரது மனுவில், உச்சநீதிமன்ற உத்தரவை முழுமையாக பின்பற்றாதது நீதிமன்ற அவமதிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்