பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு வழங்க கோரிக்கை எழுந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை.
பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்த்து வழங்கலாமா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்ரபாணி மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1,000 ரொக்க பணம், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சக்கரை வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. இதில் கரும்பும் சேர்த்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பான வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளது. தமிழக அரசின் வழக்கறிஞர் கோரிக்கை ஏற்று வழக்கு விசாரணை ஜன.2க்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில்,பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு வழங்கலாமா என்பது குறித்து முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…