அதிர்ச்சி…குன்னூரில் பள்ளி அருகே மாணவிக்கு கத்திக்குத்து!

Default Image

குன்னூரில் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிக்கு கத்தி குத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம்,குன்னூர் ஒய்எம்சி அருகே தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் வழக்கம் போல பள்ளிக்கு சென்ற நிலையில்,அப்போது அவரை பின்தொடர்ந்த ஆசிக் என்ற இளைஞர் பள்ளி  அருகே மாணவியை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓட முயன்றார்.இதனைக் கண்ட  பொதுமக்கள் இளைஞரை மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அப்போது,அந்த இளைஞர் மது போதையில் இருந்தது தெரிய வந்துள்ளது.இதனிடையே,குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும்,எதற்காக மாணவியை அந்த இளைஞர் கத்தியால் குத்தினார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்