சட்டப்பேரவையில் இருந்து பழனிசாமி தரப்பை சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற சபாநாயகர் உத்தரவு.
தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் இன்று இரண்டாவது நாளாக தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை தலைவர் தொடர்பாக அறிவிப்பேன் என தெரிவித்தும் அமளியில் ஈடுபட்டதால், இருக்கைக்கு செல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார்.
எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக கேள்வி நேரத்திற்கு பின் விளக்கம் அளிப்பேன் என்றும் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தை புறக்கணிப்பதற்காக திட்டமிட்டே அமளியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இந்த நிலையில், பேரவை மாண்பை குறைக்கும் வகையில் நடந்துகொண்டதால், சட்டப்பேரவையில் இருந்து வெளியேற ஈபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.
ஈபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்களை சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்ற அவை காவலர்களுக்கு ஆணையிட்டார். அதன்படி, அவைக்காவலர்களால் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டு வருகின்றனர். சபாநாயகர் உத்தரவை தொடர்ந்து பேரவையில் இருந்து ஈபிஎஸ் உள்ளிட்ட அவரது தரப்பு எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதனிடையே, எதிர்க்கட்சி துணைத் தலைவர் சர்ச்சை நீட்டிக்கும் நிலையில், சட்டப்பேரவையில் இபிஎஸ், ஓபிஎஸ் அருகருகே அமர்ந்திருந்தனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…