#Breaking: மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு -வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்

Default Image

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடத்த 2013-ஆம் ஆண்டு திண்டுக்கல் திமுக பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்ததாக அவர் மீது  திண்டுக்கல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.இதன் பின் ஸ்டாலின் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கின் விசாரணைக்கு தடைகோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, திண்டுக்கல் நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணைக்கு இடைகாலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில் , மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு விசாரணையை சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்தது.எம்.பி. ,எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live TODAY
Bihar jewelry store robbery
MK Stalin Annamalai
NTK Leader Seeman - TVK leader Vijay
DMK MP Kanimozhi
Virat Kohli
ind vs nz - jadeja