#Breaking:சற்று முன்…அதிமுக செயற்குழு கூட்டம் எப்போது? – ஓபிஎஸ்,ஈபிஎஸ் முக்கிய அறிவிப்பு!

Default Image

வருகின்ற ஜூன் 23 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்,இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் அறிவித்துள்ளனர்.இது தொடர்பாக,கூட்டாக இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 23.6.2022 (வியாழக் கிழமை) காலை 10 மணிக்கு,சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில்,தற்காலிக கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்’,என்று தெரிவித்துள்ளனர்.

இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில்,அதிமுகவின் அடுத்தக்கட்ட வளர்ச்சி குறித்து விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக,கட்சியை வலுப்படுத்துவது,மாநிலம் சார்ந்த பிரச்சனைகளை முன்னெடுப்பது தொடர்பாக விவாதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்