நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.இந்நிலையில்,மகாராஷ்டிரா,கேரளா, டெல்லி ஆகிய மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை தேவை என மாவட்ட ஆட்சியாளர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில்,”கல்வி நிறுவனத்தின் கூட்டு பரவலைத் தொடர்ந்து,திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலமாகவும் கொரோனா பரவுகிறது.அந்த வகையில் செங்கல்பட்டு,திருவள்ளூர்,காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் கொரோனா பரவல் உள்ளது.இதனால்,சென்னையில் அடையாறு,அண்ணாநகர்,பெருங்குடி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் கவனமும்,கொரோனா பரவல் தொடர்பாக தீவிர கண்காணிப்பு தேவை,மாறாக கண்காணிக்காவிட்டால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது “,எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும்,முதல்,இரண்டாம் தவணை தடுப்பூசி போடாதவர்களை கண்காணித்து மறுபடியும் அவர்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…