#BREAKING: நாளை மறுநாள் முதல் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை – அமைச்சர் அறிவிப்பு..!

டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை அரையாண்டு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை குறித்து நெல்லையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்தார். அப்போது, தமிழகத்தில் பள்ளிகளுக்கு நாளை மறுநாள் முதல் ஜனவரி 2-ம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை என தெரிவித்துள்ளார்.
அப்போது மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணிப்பதே தடுக்க பேருந்துகளில் கதவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் இடைவெளியின் போது மாணவர்கள் ஒரே நேரத்தில் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.